search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கொலை"

    • 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்
    • ஓய்வூதியம் பெறுவதற்காக சென்ற நிலையில் விபரீதம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (வயது 25).

    குமார் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சிலரால் பட்டாசு உடல்முழுவதும் சுற்றி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மலர் தனது 5 வயது மகனை வைத்துக்கொண்டு, கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 17-ந் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக மலைப்பகுதியில் இருந்து அணைக்கட்டு பகுதிக்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு செனறுள்ளார்.

    இதன் பின்னர் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    அல்லேரி மலைப்பாதையில் கால்நடைகளை மேய்க்கும் ஒருவர் ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தது யார் என விசாரித்ததில் மலர் என தெரியவந்தது. அவரின் உறவி னர்களுக்கு தகவல் கொ டுக்கப்பட்டு உடலை மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    மலையடிவாரத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர்.
    • தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரில் தனது சகோதரி பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    இதையடுத்து போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் கடைசியாக யாரெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஷபீர்அகமது வானி என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து ஷபீரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வரு று:-

    ஷபீர் திருமண வரன்களை அமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது தன்வீர் அகமது குடும்பத்துக்கு அறிமுகமாகி உள்ளார். தன்வீர் தனது சகோதரியின் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று ஷபீரிடம் தெரிவித்தார். ஷபீர் ஓரிரு நாட்களில் ஒரு வரனின் புகைப்படத்தை தன்வீரிடம் கொடுத்து இந்த மாப்பிள்ளை உங்கள் தங்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார்.

    அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

    இதையடுத்து திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் ஷபீருக்கும், தன்வீரின் சகோதரிக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது, ஊரை சுற்றிப்பார்ப்பது என்று இருந்துள்ளனர்.

    ஷபீர் ஒரு கட்டத்தில் தன்வீரின் சகோதரியை காதலிக்க தொடங்கினார். சில மாதங்களாக அவர்கள் ஒன்றாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் ஷபீர் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால் அவரது காதலை தன்வீரின் சகோதரி ஏற்காததுடன் திருமணத்துக்கும் மறுத்துள்ளார். அதன்பிறகு ஷபீருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்தினார்.

    இதை ஷபீர் எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் கெஞ்சினார். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.

    கடந்த 7-ந்தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு போன் செய்த ஷபீர் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் கடைசி முறை இதன்பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ஷபீர் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஷபீரை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து ஷபீரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது ஷபீர் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர் கத்தியால் அந்த பெண்ணின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதையடுத்து ஷபீர், அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார். பின்னர் அதை ஓம்புரா பகுதியில் பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஷபீரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பாலாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    மர்ம நபர்கள் அவரை கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்து உள்ளனர். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். மர்ம கும்பல் அவரை வேறு இடத்தில் கொலை செய்து பாலாற்றில் வீசி இருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இளம்பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    கொலையுண்ட பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    இளம்பெண் கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
    • ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் சில ஆண்டுகள் மதுரையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    அப்போது இவருக்கும், கணவரை இழந்த பெண்ணான ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த செல்வ ராணி (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்வராணிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரில் ஹரி பிரசாத், செல்வராணியுடன் தனி குடித்தனம் நடத்தி வந்தார்.

    ஹரிபிரசாத் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து செல்வராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹரிபிரசாத், செல்வராணி மற்றும் ஒரு குழந்தையுடன் ராமேசுவரத்திற்கு சென்று விட்டனர். அங்கும் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இந்த நிலையில் செல்வராணியின் நடத்தையில் ஹரிபிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வந்த ஹரிபிரசாத், அவரிடம் அதுகுறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், செல்வராணியை சரமாரியாக அடித்து உதைத்தார். அதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பெண் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணியை அடித்துக் கொன்ற ஹரிபிரசாத்தை கைது செய்தனர்.

    பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி. கணவரை பிரிந்து வாழும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சங்கீதா (வயது18).

    நேற்று காலை அம்சவல்லி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மகள் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மல், கொலுசு, மற்றும் வீட்டில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அம்சவல்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் அம்சவல்லியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் கள்ளக்காதலன் ராஜு சம்பவத்தன்று தனியாக இருந்த சங்கீதாவை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    சங்கீதாவுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    வீட்டில் சங்கீதா தனியாக இருப்பதை அறிந்து வந்த ராஜு அவரிடம் தவறாக நடக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜுவை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் என்ன? மற்றும் கொலை எப்படி நடந்தது? என்பது தெரியவரும்.

    • அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலுநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40), தனியார் நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி (வயது 35) , இவர்களுக்கு 10 வயதில் பலசத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அடித்து கொலை

    இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கணவரை தேடிய போது தலைமறைவானது தெரிய வந்தது. அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் சென்னைக்கு தப்பியோடிய அவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் மனைவி தரக்குறைவாக பேசியதால் அவரை அடித்து கென்றதாக கூறி உள்ளார்.

    பரபரப்பு வாக்குமூலம்

    மேலும் போலீசாரிடம் அவர்அளித்த வாக்கு மூலத்தில்கூறி இருப்பதா வதுதனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் நான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி புரிந்து வருகிறேன். ஆனால் எனது மனைவி டெய்லரிங் வேலை பார்த்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். இதனால் அவர் என்னை மதிப்பதில்லை. அடிக்கடி என்னை கேவலமாகவும், அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் திட்டுவார். மேலும் எனது தந்தை பெயரில் உள்ள சொத்துகளையும் பிரித்து வாங்கி வருமாறு கூறுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    நேற்று முன்தினம் இரவும் இதே போல எங்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் தூங்க சென்றார். ஆனால் அவர் கே வலமாகவும், அசிங்கமாகவும் பேசியதால் எனக்கு தூக்கம் வராமல் தவித்தேன், இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்த நான் தூங்கி கொண்டிருந்த எனது மனைவியை கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கிட் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது.
    • பாஜக தலைவர் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

    ஹரித்வார்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண்ணின் உடல் கால்வாய் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை விரைவு படுத்தினர்.

    விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து பாஜக தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது மற்றொரு மகன் அன்கிட் ஆர்யா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார்.
    • கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.

    திருவள்ளூர்:

    சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அமுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜோதீஸ்வரனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமுதா, கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பூட்டிய வீட்டில் அமுதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் மாயமாகி இருந்தார்.

    அமுதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே அமுதாவின் கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதன் பின்னரே அமுதா எப்படி கொலை செய்யப்பட்டார்? அதற்கான காரணம் என்ன? வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற முழுவிவரம் தெரியவரும்.

    • கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
    • கடந்த சில நாட்களாக கள்ளக்காதல் ஜோடி வீடு பூட்டியே கிடந்தது.

    திருவள்ளூர்:

    சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்தும் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களது வீடு பூட்டியே கிடந்தது.

    இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது அமுதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் மாயமாகி இருந்தார்.

    அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்று தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அமுதாவுடன் தங்கி இருந்த காதலன் ஜோதீஸ்வரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர் சிக்கினால் தான் அமுதா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

    கொலையுண்ட அமுதா இதற்கு முன்பும் 2 முறை ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து பாபு சமாதானம் பேசி அழைத்து வந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது முறையாக அமுதா ஓட்டம் பிடித்தபோது பாபுவுக்கு அவரது நண்பர் ஒருவர் மூலம் இருக்கும் இடம் தெரிந்து உள்ளது.

    அப்போது பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசியபோது, கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து சென்று இருக்கிறார். இதன் பின்னர் அமுதா கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக பாபுவின் நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கள்ளகாதலனுடன் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் ‘ஆன்’ ஆனது.
    • செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே உள்ள செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா (வயது 22). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

    இதனால் சந்தோஷ்பிரியா, தனது தாத்தா சீனன் என்பவரிடம் வளர்ந்து வந்தார். தற்போது பிஎஸ்சி முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தோஷ் பிரியா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கந்திலி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ் பிரியா பயன்படுத்தி காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் 'ஆன்' ஆனது. அந்த செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

    அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் மகேந்திரன் (21) என்பவர் ரூ.5 ஆயிரத்துக்கு செல்போனை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்தோஷ்பிரியாவின் வீட்டின் அருகே வசிக்கும் மகேந்திரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மகேந்திரன், சந்தோஷ் பிரியாவை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    இதையடுத்து கந்திலி போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகேந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைதான மகேந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் பிரியாவை நான் ஒருதலையாக காதலித்து வந்தேன். எனது காதலை அவரிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    என்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எனக்கு அவர் மீது தீராத ஏக்கம் இருந்தது.

    கடந்த ஜூலை 22-ந்தேதி இரவு சந்தோஷ் பிரியா தெருவில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நான், அவரை பைக்கில் அமரும் படி கூறினேன். மேலும் என்னை காதலிக்கும்படி கூறினேன். ஆனால் அவர் பைக்கில் ஏற மறுத்து தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை சரமாரி தாக்கி அருகில் உள்ள கம்புக்கொல்லையில் பலாத்காரம் செய்தேன்.

    பின்னர் கழுத்தை நெரித்துக்கொன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டேன். அவர் பயன்படுத்திய கைப்பையை புதரில் வீசிவிட்டேன். அவரது செல்போனை எடுத்துக் கொண்டேன்.

    போலீசார் சந்தோஷ் பிரியாவின் இறப்பை தற்கொலை வழக்காக பதிவு செய்ததால் எனக்கு தைரியம் வந்துவிட்டது. எனக்கு பணம் தேவைப்பட்டதால் சந்தோஷ் பிரியாவின் செல்போனை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்துவிட்டேன்.

    அந்த செல்போன் மூலம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
    • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

    ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

    தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

    இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அவினாஷ், பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • அவினாசுக்கும், அவரது மனைவி தீபிகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே உள்ள காரகுருசி என்ற இடத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் (வயது 30). இவருக்கும், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த தீபிகா (28) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    அவினாஷ், பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதுதொடர்பாக அவினாசுக்கும், அவரது மனைவி தீபிகாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று மதியம் அவினாஷ் வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் எழுந்ததும் குழந்தையை எடுத்து கொஞ்சி கொண்டு இருந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். தூங்கி எழுந்ததும் முகத்தை கூட கழுவாமல் குழந்தையை கொஞ்சுகிறீர்களே என அவர் கூறினார்.

    இதனை கேட்டு அவினாஷ் ஆத்திரம் அடைந்தார். அப்போதும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவினாஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தீபிகாவை வெட்டினார். இதில் தீபிகாவின் தலை மற்றும் காலில் அரிவாள் வெட்டு விழுந்து அவர் சரிந்து விழுந்தார்.

    அசைவற்று கிடந்த தாயின் அருகே சென்று அவரது குழந்தை கதறி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தீபிகாவை அவர்கள் மீட்டு பெருந்தல்மன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபிகா இறந்தார்.

    இதுகுறித்து மன்னார்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

    ×